56. கொடுங்கோன்மை
Completion requirements
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை.
| 551. | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. |
| 552. | வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. |
| 553. | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். |
| 554. | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. |
| 555. | அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. |
| 556. | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. |
| 557. | துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. |
| 558. | இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். |
| 559. | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். |
| 560. | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். |
இறுதியாக மாற்றியது: வெள்ளி, 6 டிசம்பர் 2024, 10:08 AM