34. நிலையாமை
Completion requirements
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்:நிலையாமை.
| 331. | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. |
| 332. | கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. |
| 333. | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். |
| 334. | நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். |
| 335. | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். |
| 336. | நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. |
| 337. | ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. |
| 338. | குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. |
| 339. | உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. |
| 340. | புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 4:06 PM