111. புணர்ச்சிமகிழ்தல்
Completion requirements
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல் .
| 1101 | கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. |
| 1102 | பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. |
| 1103 | தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. |
| 1104 | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். |
| 1105 | வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். |
| 1106 | உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். |
| 1107 | தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. |
| 1108 | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. |
| 1109 | ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். |
| 1110 | அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. |
Last modified: Thursday, 5 December 2024, 1:09 PM