125. நெஞ்சொடுகிளத்தல்
Completion requirements
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல்.
| 1241. | நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. |
| 1242. | காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. |
| 1243. | இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். |
| 1244. | கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. |
| 1245. | செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். |
| 1246. | கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. |
| 1247. | காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. |
| 1248. | பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. |
| 1249. | உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. |
| 1250. | துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 1:26 PM