47. தெரிந்துசெயல்வகை
Completion requirements
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:தெரிந்துசெயல்வகை.
| 461. | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். |
| 462. | தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். |
| 463. | ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். |
| 464. | தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். |
| 465. | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. |
| 466. | செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். |
| 467. | எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. |
| 468. | ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். |
| 469. | நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. |
| 470. | எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. |
இறுதியாக மாற்றியது: வெள்ளி, 6 டிசம்பர் 2024, 9:33 AM