45. பெரியாரைத் துணைக்கோடல்
Completion requirements
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்.
| 441. | அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். |
| 442. | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். |
| 443. | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். |
| 444. | தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. |
| 445. | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். |
| 446. | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். |
| 447. | இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். |
| 448. | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். |
| 449. | முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. |
| 450. | பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
Last modified: Friday, 6 December 2024, 9:29 AM