41. கல்லாமை
Completion requirements
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:கல்லாமை.
| 401. | அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். |
| 402. | கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. |
| 403. | கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். |
| 404. | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். |
| 405. | கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். |
| 406. | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். |
| 407. | நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. |
| 408. | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. |
| 409. | மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. |
| 410. | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். |
Last modified: Friday, 6 December 2024, 9:11 AM